நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில்

Negombo Crime Branch Criminal Investigation Department Prison High Court of Sri Lanka
By Rakesh Jul 15, 2026 05:35 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலைகள் அவசர நிலைமைகளைக் கையாளும் படையணி உத்தியோகத்தர்கள் 10 பேர் மற்றும் கைதிகள் 21 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது தொடர்பான வழக்கு விசாரணை, நீர்கொழும்பு நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் நேற்று(14.07.2026) இடம்பெற்றது.

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

நீதிமன்ற உத்தரவு

இதன்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலைகள் அவசர நிலமைகளை கையாளும் படையணி குழுவைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்கள் (சிறைச்சாலை காவலாலர்கள்) மற்றும் 21 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 287 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக நீதிமன்றில் விளக்கமளிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

மோதல் சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற வேண்டியுள்ளது.

தற்போது இந்தக் கைதிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதனைப் பரிசீலித்த நீதிவான் ஷிலனி பெரேரா, கைதிகளிடம் வாக்குமூலம் பெற தேவையான வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்

அத்துடன், கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் களுஆராய்ச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நீதிமன்றில் மேலதிக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்து மன்றில் விடயங்களை முன்வைத்த வணிக குற்றப் பிரிவினர், இக்கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படும் அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக கொலைக் குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

தண்டனைச் சட்டக்கோவையின் 102, 113, 146, 186, 300, 315, 316, 317, 344 ஆகிய பிரிவுகளின் கீழும் ஏனைய சட்டங்களின் கீழும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், தோட்டாக்கள் அடங்கிய 60 துப்பாக்கிகள் வழக்குப் பொருளாக குறிப்பிடப்பட்டு, வழக்குப்பொருள் களஞ்சியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதற்கமை வழக்கு விசாரணைக்கு அவசியமான சந்தரப்பங்களின் போது அவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள்

மேலும் விடயங்களை முன்வைத்த அதிகாரிகள், கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் டிவிஆர் இயந்திரங்களைச் சேதப்படுத்தியுள்ள போதிலும், அதிலிருந்த இரண்டு கணினி வன்வட்டுக்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அவற்றை இரசாயனப் பகுப்பாய்வுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினிப் பிரிவுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள் இதன்போது நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். நீதிவான் அதற்கு அனுமதி வழங்கினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியால் வழங்கப்பட்ட 3 சுருக்கமான பிரேத பரிசோதனை அறிக்கைகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கொடூரமான தாக்குதல்கள், துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் குறித்து அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த மோதல் குறித்து நீதிமன்றில் தெரிவிக்கையில்,

கனம் நீதிவான் அவர்களே, கடந்த 5 ஆம் திகதி காலையிலேயே இந்தச் சம்பவத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவானது.

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

நீர்கொழும்பு பொலிஸார்

சிறைச்சாலையின் 'ஏ 1' அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஷ் புஷ்பகுமார எனப்படும் 'கடுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதி, உடற்பயிற்சி செய்ய வழங்கப்பட்ட நேரம் போதாது எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலவரம் செய்துள்ளார்.

இதனால் அவர் 'எல்' வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மோதலில் ஈடுபட்டமையால் மீண்டும் 'ஏ 1' அறைக்கு கொண்டு வரப்பட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

அங்கு ஏற்பட்ட கடுமையான மோதலில் ஆரம்பத்தில் இரு கைதிகள் உயிரிழந்தமையுடன் 36 பேர் காயமடைந்தனர். இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயன்றபோது, கைதிகள் முழுச் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டையும் தமது கைகளுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் அதிகாரிகள் நீர்கொழும்பு பொலிஸாருக்கும், நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கும் அவசர தகவல் வழங்கினர். எனினும், சம்பவ இடத்தைச் சோதனையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளைக் கைதிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

மறுநாள் வரை சிறைச்சாலை கைதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பிலிருந்து 89 சிறைச்சாலை பொலிஸ் உத்தியோகத்தர்களை வரவழைத்துள்ளனர்.

மோதலை கட்டுப்படுத்தல்

அந்தக் காலப்பகுதியில் சிறைச்சாலையில் மொத்தம் 2 ஆயிரத்து 417 கைதிகள் இருந்தனர். 162 தண்டனை பெற்ற கைதிகள், 2 ஆயிரத்து 255 விளக்கமறியல் கைதிகள், இதில் பெண்கள் 161 பேர் அடங்குவர்.

அத்துடன் 161 சிறைச்சாலை ஊழியர்கள் கடமையில் இருந்தனர். மொத்தம் 16 கைதிகள் அறைகள் காணப்படுகின்றன.

கடந்த 6 ஆம் திகதி காலை உணவு வழங்கச் சென்ற போது, 'அதிகாரிகளே உள்ளே வர வேண்டாம், உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள்' எனக் கைதிகள் எச்சரித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கும் 10.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கினர். அதிகாரிகள் ஓடி வந்து இரும்பு வலைக் கதவு வழியாக தப்பித்துக் கொண்டனர்.

ஆனால், மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சிறைச்சாலைகள் அவசர நிலமைகளைக் கையாளும் படையணி குழு உத்தியோகத்தர்களுக்கு வலைக் கதவுப் பக்கமாக ஓடிவந்து தப்புவது குறித்து போதிய பரிச்சயம் இல்லாதமையால், அவர்கள் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கை

அங்கே கைதிகள் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து, துப்பாக்கிகளைத் எடுத்து சுடத் தொடங்கிய பின்னரே, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பதில் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டனர்.

சிறைச்சாலைக்குள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ரி - 56 ரக தோட்டாக்கள் மற்றும் 9 எம்.எம். ரக தோட்டாக்கள் உட்பட 271 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

தற்போது 3 விசாரணைக் குழுக்களைச் சேர்ந்த 40 அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சந்தேகநபர்கள் பெயரிடப்படவுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விவரங்களை மதிப்பிட மதிப்பீட்டுத் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறும், இராணுவத்தினரால் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் நிகழ்நிலை பதிவுகளைப் பெற்றுக்கொள்ள இராணுவ சமிக்ஞை படையணிக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் கோரிய நிலையில், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான், இந்த வழக்கின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 16 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மரண விசாரணைகள் தொடர்பான வழக்குகளில், இதுவரை சாட்சியம் அழைக்கப்படாத மரணங்கள் குறித்து, சாட்சியங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயார்படுத்த வேண்டும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். 

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US