நள்ளிரவு இடம்பெற்ற மோதல் - கொடூரமாக அடித்து ஒருவர் கொலை
அம்பாந்தோட்டை - தங்காலை பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த கொலை நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த தாக்குதலில் மஹாகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

தங்கல்லே பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 28 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.