இலங்கை – இந்திய உறவில் முக்கிய நகர்வு! இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கவுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டுள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலகட்டத்தில் இந்தியா வழங்கிய உதவிகளும், 2025ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளியின் பின்னர் முதலாவது உதவிகளை வழங்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா செயற்பட்டமையும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு மேலும் வலுசேர்த்தன.
இலங்கை விஜயம்
இது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘மஹாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வை — பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் — ஆகியவற்றின் மீதான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாகும்.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரியமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், பரஸ்பர நன்மை பயக்கும் பல்வேறு துறைகளில், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! முற்றிலும் பொய்யானது என மறுத்த அமெரிக்கா