ஜனாதிபதியை அதானி நிறுவனத் தலைவர் சந்திக்கவுள்ளதாக தகவல்
இந்தியாவின் அதானி நிறுவனத்தின் தலைவர் கௌத்தம் அதானி (Gautam Adani), இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதியை, அதானி சந்திப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திப் பணிகள் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் அதானி, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கௌதம் அதானி, இன்று இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எனவும் ஜனாதிபதியைத் தவிர வேறு அரச உயர் அதிகாரிகளுடனும் அவர் சந்திப்பு நடத்துவார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
தொடர்புடைய செய்தி...
கொழும்பு துறைமுகத்தில் தமது கட்டுமானத்தை ஆரம்பிக்கவுள்ள இந்தியாவின் அதானி துறைமுகங்கள்