இந்திய பெருங்கடலில் சீனா! இலங்கைக்கு விரைந்த இந்திய ராணுவ தளபதியின் பின்னணி

India China Sri Lanka M.M.Naravane
By Independent Writer Oct 13, 2021 12:08 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report
Courtesy: one india

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே (M.M.Naravane) இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். தெற்காசிய அரசியலில் பல மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 10 வருடமாகவே ஆசிய கண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா , பிலிப்பைன்ஸ் எதிர்ப்பை மீறி சீனா தனது டிராகன் வாலை நீட்டி வருகிறது. இன்னொரு பக்கம் இந்திய பெருங்கடலில் எப்படியாவது ஆதிக்கம் செலுத்தி விடலாமா என்று போராடிக்கொண்டு இருக்கிறது.

ஆசியாவில் இருக்கும் சிறிய நாடுகளில் முதலீடு செய்கிறேன் என்ற பெயரில் சீனா மூக்கை நுழைத்துக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஏற்கனவே சீனாவின் சொல்லுக்கு கட்டுப்படும் நாடுகளாக மாறிவிட்டன.

சீனா இலங்கை

இலங்கையிலும் கடந்த சில வருடங்களாக சீனா தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இலங்கை துறைமுகத்தில் சீனா தளம் அமைத்து இருந்தாலும், அது ராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட முடியாது. ஆனாலும் இலங்கை தீவிற்கு அருகே சிறிய பகுதி ஒன்றை வாங்கி உள்ள சீனா அதை தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவும் அறிவித்துள்ளது. இலங்கை மூலமாக இந்திய பெருங்கடலை கட்டுப்படுத்த சீனா நினைக்கிறது.    

சீனா

சீனாவின் இந்த பூச்சாண்டிக்கு பதிலடி கொடுக்கவே கடத்த வருடம் இந்தியா குவாட் மீட்டிங் நடத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் இணைந்து குவாட் மீட்டிங் நடத்தியது. நான்கு நாடுகளின் போர் கப்பல்களும் இந்த கடல் பகுதியில் போர் பயிற்சியிலும் கூட ஈடுப்பட்டன. இது இந்திய பெருங்கடலில் இந்தியாதான் கிங் என்பதை உணர்ந்தும் வகையில் இருந்தது. 

இந்தியா கிடையாது

ஆனால் இப்போது யுகே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்து ஆக்கஸ் என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இதில் இந்தியாவை சேர்க்க முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது. ஆக்கஸ் கூட்டமைப்பு உருவான காரணத்தால் இன்னொரு பக்கம் குவாட் அமைப்பின் முக்கியத்துவம் சரிந்துவிட்டது. இனி குவாட் கூட்டங்கள் வழக்கம் போல நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இலங்கையுடன் உறவை புதுப்பிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. 

இந்திய பெருங்கடல்

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்பதால் இலங்கையை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா மீண்டும் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா இலங்கையின் கூட்டு பாதுகாப்பு பயிற்சியால் மித்ரா சக்தி பயிச்சி இலங்கையில் அம்பாரா பகுதியில் நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி 15ம் தேதி வரை நடக்கும். 

வெளியுறவுத்துறை அதிகாரிகள்

இந்த நிலையில்தான் இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனே இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இரண்டு நாட்டு உறவு குறித்தும், கடல் பாதுகாப்பு குறித்து, ராணுவ போர் இணை பயிற்சி குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனேவிற்கு இலங்கை ராணுவ தளபதிகள் வரவேற்பு கொடுத்தனர். 

வெளியுறவுத்துறை அதிகாரிகள்

இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில்தான் சந்திப்பு நடத்தினார்கள். இரண்டு நாட்டு உறவு குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில்தான் இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனே இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று இருக்கிறார். இதை ராணுவ ரீதியான பல ஆலோசனைகள் பெறப்படுகிறது. வெளிப்படையாக சீனா பற்றிய விவாதம் இதில் இடம்பெறுவதை பற்றி தகவல் இல்லை என்றாலும், மறைமுகமாக சீனா பற்றி விவாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

 You My Like This Video




2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US