சீனா - அமெரிக்காவின் இலங்கை மீதான மூலோபாய கவனத்துக்குள் சிக்குண்டுள்ள இந்தியா

Sri Lanka United States of America India Kachchatheevu World
By Dharu Jul 20, 2025 08:45 AM GMT
Report

சீனா, அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு சக்திகளின் இலங்கை மீதான மூலோபாய கவனத்தின் பின்னணியால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, வரலாறு காணாத உயர்ந்த நிலையில் உள்ளன.

ஆனால், வளர்ந்து வரும் கடற்றொலிலாளர் தகராறு இந்த உறவுகளின் சாதனைகளை சவாலுக்கு உட்படுத்தும் ஆற்றல் கொண்டது என குறித்த செய்தியில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தியப் பெருங்கடலில் கடல் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சூழலில் இலங்கையின் மூலோபாய கவனத்தினை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு: வெளியான தகவல்

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு: வெளியான தகவல்

கொழும்பு டாக்ஸ் கையகப்படுத்தல்

மும்பையை தளமாகக் கொண்ட மசகான் டாக்ஸ் என்ற இந்திய பொதுத்துறை நிறுவனம், சமீபத்தில் கொழும்பு டாக்ஸை கையகப்படுத்தியது.

இது இந்தியாவின் மூலோபாய நகர்வாக பார்க்கப்படுகிறது.

சீனா - அமெரிக்காவின் இலங்கை மீதான மூலோபாய கவனத்துக்குள் சிக்குண்டுள்ள இந்தியா | India Fears China Us Strategic Focus On Sri Lanka

இது, சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வரும் ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற முக்கிய இடங்களை இந்தியா இழக்காமல் பாதுகாக்கும் முயற்சியாகும் என இந்திய தரப்புகள் தெரிவிக்கின்றன.

இதனுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள், இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பை முறைப்படுத்தியுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடல் பாதுகாப்பு

இந்தியாவும் இலங்கையும் ‘கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில்’ (CSC) கூட்டாளிகளாக உள்ளன. இது ஆரம்பத்தில் எண்ணெய் கசிவு போன்ற பாரம்பரியமற்ற கடல் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது.

சீனா - அமெரிக்காவின் இலங்கை மீதான மூலோபாய கவனத்துக்குள் சிக்குண்டுள்ள இந்தியா | India Fears China Us Strategic Focus On Sri Lanka

ஆனால் இப்போது சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையின் ஒரு பகுதியாக, கோவிட் கால உதவிகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது வழங்கப்பட்ட நிதி உதவிகள், இரு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையை வளர்த்துள்ளன.

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம் : வெளியான அதிர்ச்சிக் காணொளி

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம் : வெளியான அதிர்ச்சிக் காணொளி

கடற்றொழிலாளர் பிரச்சினை

கடற்றொழிலாளர் தகராறு, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு இருதரப்பு ஒப்பந்தங்களின் எதிர்பாராத விளைவாக உருவாகிய ஒன்றாகும்.

சீனா - அமெரிக்காவின் இலங்கை மீதான மூலோபாய கவனத்துக்குள் சிக்குண்டுள்ள இந்தியா | India Fears China Us Strategic Focus On Sri Lanka

இந்த ஒப்பந்தங்கள், ஐ.நா. கடல் சட்ட மாநாட்டின் (UNCLOS) கீழ் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) வரையறுக்க நோக்கமாகக் கொண்டவை.

ஆனால், இந்திய கடற்றொழிலாளர்களின் அதிவேக அடிமட்ட இழுவைப் படகுகள் மற்றும் பர்ஸ் சீன் வலைகளின் பயன்பாடு, இலங்கை கடற்றொழிலாளரர்கள், குறிப்பாக வடக்கின் தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது, மீன் வளங்களையும் கடல் சூழலையும் அழிக்கிறது என்று இலங்கை தரப்பு குற்றம்சாட்டுகின்றன.

வீட்டுக்குள் இருந்து கேட்ட இரு சிறுவர்களின் கதறல் சத்தம்! இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாய்

வீட்டுக்குள் இருந்து கேட்ட இரு சிறுவர்களின் கதறல் சத்தம்! இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாய்

இருதரப்பு சவால்கள்

இரு நாடுகளும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றன. இலங்கை தரப்பு, இந்திய கடற்றொழிலாளர்களின் அழிவு முறைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சீனா - அமெரிக்காவின் இலங்கை மீதான மூலோபாய கவனத்துக்குள் சிக்குண்டுள்ள இந்தியா | India Fears China Us Strategic Focus On Sri Lanka

எனினும், இந்தியா, ஆழ்கடல் கடற்றொழிலாளர் முயற்சிகளை ஊக்குவிக்கும் மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால், இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்களின் அழிவு முறைகள் நிறுத்தப்படும் வரை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

மேலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகள் மற்றும் நடுக்கடல் மோதல்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளாகியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி கைது

கச்சத்தீவு பிரச்சினை

கச்சத்தீவு தீவு தொடர்பான சர்ச்சை, கடற்றொழிலாளர் தகராறுடன் இணைந்து, இருதரப்பு உறவுகளில் நீண்ட நிழலை வீசுகிறது.

சீனா - அமெரிக்காவின் இலங்கை மீதான மூலோபாய கவனத்துக்குள் சிக்குண்டுள்ள இந்தியா | India Fears China Us Strategic Focus On Sri Lanka

தமிழக அரசியல்வாதிகள், குறிப்பாக மறைந்த ஜெயலலிதா மற்றும் எம். கருணாநிதி, இந்த ஒப்பந்தங்களை இரத்து செய்யக் கோரி வழக்குகளைத் தொடர்ந்தனர்.

மேலும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, UNCLOS உறுதிமொழிகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வந்தால் சர்வதேச அரங்கில் சிக்கல்களை உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள், கச்சத்தீவு பிரச்சினையை மீண்டும் அரசியல் சர்ச்சையாக உயர்த்தலாம்.

இது, இருதரப்பு உறவுகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இலங்கையின் மூலோபாய வட்டாரங்கள், இந்தியாவின் அரசியல் சூழல் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கலாம்.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் சிக்கல் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை ஆகியவை, இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளுக்கு சவாலாக உள்ளன.

இந்தியாவும் இலங்கையும் இந்தப் பிரச்சினைகளை அரசியல் மற்றும் தேர்தல் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் நம்பிக்கை கட்டமைப்பு மூலம் தீர்க்க முயல வேண்டும்.

இல்லையெனில், இந்தச் சிக்கல்கள் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையலாம்.    

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மன்னார், வெள்ளவத்தை

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
நன்றி நவிலல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US