மீண்டும் இலங்கைக்குள் நுழையவுள்ள இந்திய சீன கப்பல்கள்!
சீனாவில் இருந்து சேதனப்பசளைகளை ஏற்றிய முதல் கப்பல் எதிர்வரும் பெப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 8ஆயிரம் தொன் எடையைக்கொண்ட இந்த பசளைகள், ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது.
மொத்தமாக சீன நிறுவனத்திடம் இருந்து 96ஆயிரம் மெற்றிக் தொன் சேதனப்பசளைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை கட்டம் கட்டமாக இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளன.
இந்த பசளைகள் எதிர்வரும் பயிர்ச்செய்கை பருவத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.
ஏற்கனவே இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட சீன நிறுவனத்தின் சேதனப்பசளைகளில் பக்றீரியா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அதனை ஏற்றி வந்த கப்பல், திரும்பிச்சென்றது.
எனினும் அந்த பசளைக்கான நாணயக்கடிதம் பெறப்பட்ட நிலையில் நீண்ட பிரச்சினைக்கு பின்னர் இலங்கையின் மக்கள் வங்கி, 6.9 மில்லியன் டொலர்களை நேற்று வெள்ளிக்கிழமை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது
இதற்கிடையில் சுமார் 400,000 லீற்றர் திரவ பசளை இந்த மாத இறுதியில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதனையடுத்து சுமார் 10 லட்சம் திரவ பசளையை, நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் பேர்டிலைசர்ஸ் கம்பனியின் தலைவர் விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021