மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, இந்த நிலை தொடருமானால் மேலும் பல ஆயிரம் ஏக்கர் அழிவடையும் எனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உன்னிச்சை குளத்தில் 32.5 அடி தண்ணீர் உள்ளதாகவும் குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மூன்று வான்கதவுகளும் 5 அடிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதன் காரணத்தால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் வெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கவும் என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
