உலகை நடுங்கவிட்ட எப்ஸ்டீன் ஆவணங்கள்! பில்கேட்ஸ் வழங்கிய வாக்குமூலம்..
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், தனது திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் தொடர்பான தகவல்களை பயன்படுத்தி தன்னை அச்சுறுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றதாக, தற்போது மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு சிறையில் உயிரிழந்த எப்ஸ்டீனுடன் தனக்கிருந்த தொடர்பு குறித்து, ஜூன் 10 ஆம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற விசாரணையில் பில் கேட்ஸ் சாட்சியம் அளித்தார்.
பில் கேட்ஸ்
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சாட்சியப் பதிவின்படி, “மறைமுக அச்சுறுத்தல்கள்” குறித்து பேசிய பில் கேட்ஸ், எப்ஸ்டீன் தனது திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் பற்றிய தகவல்களை பயன்படுத்தி தன்னை தனது வட்டாரத்தில் தொடர வைத்திருக்க முயன்றதாக கூறினார்.
அப்போது கேட்ஸ், எப்ஸ்டீனிடமிருந்து விலக முயன்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

நான் மிரட்டப்பட்டதாக சொல்ல முடியாது. ஆனால் இந்த மின்னஞ்சல்களைப் பார்க்கும்போது, எப்ஸ்டீனின் சிந்தனை அந்த திசையில் சென்றது போலத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் ஜனவரி மாதத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் வழக்கின் ஆவணங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நான் ‘பிளாக்மெயில்’ என அழைக்கும் வகையில் அவர் எனக்கு எந்தச் செய்தியையும் அனுப்பவில்லை.
எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்பு
ஆனால் சில வரைவு மின்னஞ்சல்களில், அவர் அல்லது வேறு யாரையாவது வழிநடத்தி என்னை எவ்வாறு அச்சுறுத்தலாம் என்பதை முன்கூட்டியே பயிற்சி செய்தது போலத் தோன்றியது. எனினும் அவற்றில் எதுவும் எனக்கு அனுப்பப்படவில்லை என்று கேட்ஸ் கூறினார்.
70 வயதான கேட்ஸ், சாட்சியமளித்த நாளில் வெளியிட்ட தொடக்க அறிக்கையில், எப்ஸ்டீனின் குற்றச் செயல்கள் குறித்து தனக்கு எந்த அறிவும் இல்லை என்றும், “நான் யாரையும் பாதித்ததில்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில், எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்பு தனது வாழ்க்கையில் ஒரு பெரிய தவறு என கேட்ஸ் The Wall Street Journal-க்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார்.
மேலும், இரண்டு ரஷ்ய பெண்களுடன் திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் இருந்ததை ஏற்றுக்கொண்ட அவர், எப்ஸ்டீனின் செயல்பாடுகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்தார். கேட்ஸின் கூற்றுப்படி, எப்ஸ்டீனுடன் அவரது தொடர்பு 2011 ஆம் ஆண்டில் தொடங்கியது.
அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சிறார்களை உட்படுத்திய பாலியல் குற்றச்சாட்டுகளில் எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள்
எப்ஸ்டீனின் சட்டப் பிரச்சினைகள் குறித்து தனக்கு தெரிந்திருந்ததாகவும், அதே நேரத்தில் உலக சுகாதாரத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான நிதியை திரட்டக்கூடிய நபர் என்ற வகையிலும் எப்ஸ்டீன் குறித்து தமக்கு கூறப்பட்டிருந்ததாகவும் கேட்ஸ் தெரிவித்தார்.
அந்த தண்டனை பாலியல் குற்றம் தொடர்பானது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதன் விவரங்களை நான் ஆழமாக ஆராயவில்லை.உண்மையில் நான் அப்படிச் செய்திருக்க வேண்டும் என்றார்.

எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் ஒருவரின் பெயர் இடம்பெறுவது மட்டும், அவர் எந்தத் தவறும் செய்தார் என்பதை நிரூபிப்பதில்லை.
இருப்பினும், அந்த ஆவணங்கள் எப்ஸ்டீன் அல்லது அவரது நெருங்கிய வட்டாரத்தினருடன் சில பிரபல நபர்களுக்கு தொடர்புகள் இருந்ததை வெளிப்படுத்துகின்றன.
அவர்களில் சிலர் அந்த தொடர்புகளை முன்னர் குறைத்து மதிப்பிட்டதோ அல்லது முற்றிலும் மறுத்ததோ குறிப்பிடத்தக்கது.