ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் திறந்து வைப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் இன்று (07.03.2025) மாலை 4:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக குறித்த தொழிற்சாலையின் பழைய இயந்திர சாதனங்களை திருத்தம் செய்து இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சு
குறித்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் சுனில் கந்துநித்தி மற்றும் நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷ சூரியபெருமா ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலக, பிரதேச செயலக உயர் அதிகாரிகள் குறித்த பிரதேச மக்களுடைய பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .






தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
