ஏதிர்க்கட்சி உறுப்பினர் ஐஎம்எப்பிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்
இலங்கை அரசாங்கத்திற்கு வரிச் சலுகைகள் மற்றும் வரி குறைப்புகளை வழங்குவதற்கு தலையிடுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சர்வதேச நாணய நிதிய IMF பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
முன்வைத்துள்ள கோரிக்கைகள்
சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்குத் தலையிடுமாறு தான் கோரிக்கை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பெரிய அளவிலான வர்த்தகங்கள் மீது மாத்திரம் கவனம் செலுத்தும் கொள்கையினால் ஏராளமான சிறு தொழில்கள் அழிந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அதைக் குறைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த IMF பிரதிநிதிகள் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினாலும் செலவை ஈடுசெய்யக்கூடிய மின்சாரக் கட்டண முறைமையையே தாங்கள் விரும்புவதாக வலியுறுத்தினர்.

ஊழல் தொடர்பான பிரச்சினைகளையும் அரசாங்கத்துடன் IMF பிரதிநிதிகள் விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தினார்.
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி. சோதனையிடப்படாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான மோசடி.
இந்த விடயங்கள் குறித்துப் பிரதிநிதிகள் குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியதுடன் இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதாக IMF பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 16 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri