இலங்கை கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி
இலங்கை கிரிக்கட் அணியின் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலாதுறை தூதுவராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்க தீர்மானம்
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சனத் ஜயசூரியவை சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்கத் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாயக்கிழமை இது தொடர்பிலான விசேட நிகழ்வு ஒன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனத் ஜயசூரிய உலக அளவில் பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து சுற்றுலாத்துறை மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சனத் ஜயசூரிய இதுவரையில் அதிகாரபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri