இலங்கை கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி
இலங்கை கிரிக்கட் அணியின் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலாதுறை தூதுவராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்க தீர்மானம்
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சனத் ஜயசூரியவை சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்கத் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாயக்கிழமை இது தொடர்பிலான விசேட நிகழ்வு ஒன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரிய உலக அளவில் பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து சுற்றுலாத்துறை மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சனத் ஜயசூரிய இதுவரையில் அதிகாரபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
