இலங்கை கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி
இலங்கை கிரிக்கட் அணியின் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலாதுறை தூதுவராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்க தீர்மானம்
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சனத் ஜயசூரியவை சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்கத் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாயக்கிழமை இது தொடர்பிலான விசேட நிகழ்வு ஒன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரிய உலக அளவில் பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து சுற்றுலாத்துறை மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சனத் ஜயசூரிய இதுவரையில் அதிகாரபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
