கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் : மக்கள் அதிருப்தி
கொழும்பு கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் விஜயம் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன் அறிவித்தல் இன்றி பாதைகள் மூடப்பட்டதற்கு மக்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு தர்மசங்கடமான நிலை
வாகன நெரிசலுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் வாகனத்தின் ஹோர்ன்களை ஒலிக்கச் செய்து சாரதிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட காலி வீதியில் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேச நாடான ஈரானிய ஜனாதிபதி இலங்கை விஜயத்தின் போது சாரதிகளின் இந்த எதிர்ப்பு, அரசாங்கத்திற்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan