தம்புள்ளை வெப்பநிலை களஞ்சியம் குறித்து ஹர்ஷ எம்.பியின் கருத்து
தம்புள்ளை வெப்பநிலை களஞ்சியத் திறப்பு விழா நாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இணைந்து திறக்கப்பட்ட தம்புள்ளையின் விவசாய களஞ்சியம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார்.
அத்தோடு, இந்தத் திறப்பு விழா குறித்து தாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வணிகத் திட்டம்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த களஞ்சியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு விரிவான வணிகத் திட்டத்தையும் நாங்கள் உருவாக்கினோம். நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வியால் இந்த திட்டத்தை எங்களால் முடிக்க முடியவில்லை.
பின்னர், ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இங்கே வேலையை முடிக்க உண்மையான விருப்பம் இல்லை. நாங்கள் உருவாக்கிய வணிகத் திட்டத்திலிருந்து இந்த அரசாங்கம் பயனடையும்.
விவசாய சேமிப்பு வளாகம்
தேவைப்படும்போது விவசாயிகளின் காய்கறி மற்றும் பழ அறுவடைகளை சேமித்து நிர்வகிக்க, 5,000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட நாட்டின் முதல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்பாட்டு விவசாய சேமிப்பு வளாகமாக இதை நாங்கள் தொடங்கினோம்.
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, "பிரபாஸ்வர" திட்டத்தின் மூலம் மத்திய மாகாணத்தை உள்ளடக்கிய கெப்பட்டிபொலவிலும், வடக்கு மாகாணத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாணத்திலும், தென் மாகாணத்தை உள்ளடக்கிய எம்பிலிப்பிட்டியவிலும் இதேபோன்ற விவசாய சேமிப்பு வளாகங்களை நிர்மாணிக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
