நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு
எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்
மேலும், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நாட்டில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் உள்ளடங்களாக 8 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு பெருமளவானோர் கொல்லப்பட்டதுடன் மிக அதிகமானோர் படுகாயமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 6 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் நிலையில், நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
