அரசாங்கத்தின் உதவி திட்டம்! கொட்டும் மழையிலும் குவிந்த மக்கள்
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையையும் பொருட்படுத்தாமல், அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள பெருமளவான மக்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்று முதற்தடவையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள்
இதன் காரணமாக, பெருமளவான மக்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வருகை தந்ததாக நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பெருமளவான மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க, டோக்கன் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அந்த இடத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வாரத்தின் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 10 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
