விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி
சிறுபோகத்தின் போது நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான ”மடபண” கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சலுகையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடன் சலுகை
இந்த திட்டம் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்த கடன் சலுகையினூடாக 7% வருடாந்திர வட்டியில் 50 மில்லியன் ரூபா வரையிலான வரையிலான கடனை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன் , அந்த கடன்தொகையை 180 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
பதினான்கு வங்கிகள்
இந்த கடன் திட்டத்துக்கமைய வங்கிகளினூடாக விடுவிக்கப்படவுள்ள மொத்த கடன் தொகையின் பெறுமதி 6,500 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் சிலோன் வங்கி, மக்கள் வங்கி, பிராந்திய மேம்பாட்டு வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, வணிக வங்கி, DFCC வங்கி, தேசிய மேம்பாட்டு வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, சனசா மேம்பாட்டு வங்கி, அமானா வங்கி, கார்கில்ஸ் வங்கி மற்றும் பான் ஆசியா வங்கி என்பன பதினான்கு வங்கிகள் பங்கேற்கவுள்ளன.
மேலும், விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக விவசாயத் திணைக்களத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கொள்முதல் விலையில் நெல் வாங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.