போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது: நெதன்யாகு திட்டவட்டம்
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சா்வதேச அளவில் நிா்பந்தம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளாா்.
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள காணொளியில் அவா் பேசியதாவது,
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போா் இறுதி வரை தொடரும்.
சர்வதேச நிா்பந்தம்
இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.
போரில் நமக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும், சர்வதேச நிா்பந்தங்கள் ஆகியவை தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்தாலும் காசாவில் மீதான தாக்குதல் நிறுத்தப்படமாட்டாது.
இறுதி வெற்றி கிடைக்கும்வரை போா் தொடரும். அதை மீறிய எந்தத் தீா்வும் ஏற்கப்படாது” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
