தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று(16.01.2026) இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிறை தண்டனை
கடந்த 2024, டிசம்பர் 3ஆம் திகதி, ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாடாளுமன்றை முடக்க முயற்சி செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால் சில மணிநேரங்களிலேயே இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோல், விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அவர் மீது வழக்கும் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam