தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டி: தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை சாதனை
கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் 17 வயது பிரிவு அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பதக்கத்தை வென்றுள்ளது.
இப்போட்டி இன்று (09.10.2023) காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மஹாஜன கல்லூரி முதல்பாதி ஆட்டத்தில் 1 கோலையும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
20 வயது பிரிவு அணி இரண்டாம் இடம்
இதேவேளை 20 வயது பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரியை எதிர்கொண்ட பொலன்றுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று முதலாம் இடத்தை பிடித்துள்ளது.
முதல் பாதி ஆட்டத்தின்போது இரண்டு அணிகளும் மிகவும் உற்சாகமாக விளையாடிய போதும் கோல்கள் எவற்றையும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது பொலன்னறுவை பென்டிவெவா அணியினர் இரண்டு கோல்களை அடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர்.













பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
