கனடாவிலிருந்து இந்தியா புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
கனடாவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் டெல்லி நோக்கிப் புறப்பட்ட விமானமொன்று அவசரமாக மீண்டும் கனடா விமான நிலையம் திரும்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான AC042 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலே விமானத்தில் என்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு என்ஜினில் விமானத்தைச் செலுத்துவதற்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் கனடா திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |