சிறைச்சாலை அதிகாரி மீது 05 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
மாத்தறை - வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று (05.08.2023) மாலை தனது கடமையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அதிகாரி வீடு நோக்கி பேருந்தில் பயணித்த போது அதில் ஏறிய 05 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.
மேலதிக விசாரணை
தாக்குதலினால் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று முன்தினம் (04.08.2023) மாத்தறை சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் பெற்று காலி சிறைச்சாலைக்கு கடமைக்காக நேற்றைய தினமே (05.08.2023) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
