மன்னாரில் சட்டவிரோத மதுபானத்துடன் ஐவர் கைது
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட கசிப்புடன் மன்னாரில் 5 பேர் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வட்டுப்பித்தான் மடு,சமயபுரம்,புதுக்கமம் போன்ற கிராமங்களில் வைத்தே இவர்கள் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் (கசிப்பு) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்ட நிலையில், இன்று மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதிகளில் வைத்து 5 பேரும் கைது
செய்யப்பட்டதோடு,அவர்களின் உடமையிலிருந்து சட்டவிரோதமான முறையில்
தயாரிக்கப்பட்ட கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.