இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் நோயாளர் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் நோயாளர் நைஜீரியா நாட்டிலிருந்து வருகை தந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் எந்தவொரு கோவிட் தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லையென உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியா் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளுக்குள் தலைதூக்கியுள்ள கோவிட்டின் திரிபான ஒமிக்ரொன் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இன்றைய தினம் இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரொன் கோவிட் திரிபு: நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri