மட்டக்களப்பு விவசாயிகளுக்கான உரத் தட்டுபாடு : ஜனாதிபதியை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று(12.05.2026) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய ஊடக சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை ஜனாதிபதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் இணைந்து நாங்களும் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும்.
தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் பணத்தினை வழங்கியுள்ளபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை வழங்குவதற்கு இழுத்தடிப்புகளை செய்து வருகிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகம் விதைக்கப்பட்டு, 50 நாட்களைக் கடந்த நிலையில் உள்ளது. 50 நாட்கள் கடந்தும் சில கமலநல சேவைகள் நிலையத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் பசளை விநியோகம் நடைபெறாமல் உள்ளது மிக வருத்தத்தினைத் தருகின்றது.
உரம் விநியோகம் தடை
வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு தனியார் கம்பெனி மூலம் உர விநியோகம் நடைபெற வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்து அவர்களுக்குரிய பணமும் கமலநல சேவைகள் நிலையத்தினால் கடந்த மாதம் (ஏப்ரல்) வைப்பிலிடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது.
இன்று வரை ஒவ்வொரு நாளும் நாங்களும் கமலநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய உர செயலகம் ஆகியவற்றுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் நாளை வரும் நாளை வரும் என்று விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றார்கள். அதாவது அந்த நிறுவனம் வந்து எங்கள் அதிகாரிகளைக் கூட ஏமாற்றுகின்றது.

நேற்று தனியார் நிறுவனத்துக்கு மூன்று லொறிகள் அனுப்பப்பட்டது. மூன்று லொறிகளில் ஒரு லொறியில் உரம் ஏற்றப்பட்டும், பிற்பகல் அந்த லொறியை தடுத்து அந்த லொறியின் சாவியை அந்த உரம் விநியோகம் செய்யும் கம்பெனி பறித்து உரம் வருவதனைத் தடை செய்துள்ளார்கள்.
அதன் பிற்பாடு எங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய உர செயலகம், பிரதியாணையாளர் கமலநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு, அதன் பிற்பாடு ஒரு லொறி மாத்திரம் இரவு விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam