தென்னிலங்கையில் நள்ளிரவில் இடம்பெற்ற கொடூரம்! உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு நபர் கொலை
புதிய இணைப்பு
2025 ஆம் ஆண்டு மாமடல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து மூவரை படுகொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபரே திங்கட்கிழமை (11) இரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் இரவு மாமடல பகுதியில் உள்ள உயிரிழந்தவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரது தலையை துண்டித்து மாமடல சந்தியில் வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, உயிரிழந்தவரின் மாமனார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலத்த காயமடைந்த அவர் தற்போது அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடலிலிருந்து தலை துண்டிப்பு
குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலையை துண்டித்து மாமடல சந்தியில் உள்ள சிலைக்கு அடியில் மறைத்து வைத்து விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி அம்பலாந்தோட்டை, அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலை செய்யப்பட்ட நபர், கடந்த மார்ச் 30 ஆம் திகதி பிணையில் வெளியே வந்துள்ளார்.
வெளியான காரணம்
முக்கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகளால் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் அவ்விடத்தில் விட்டுச்சென்ற நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்