இலங்கையில் எரிபொருளுக்கான QR தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் எரிபொருளுக்கான QR முறையை முழுமையாக நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், QR முறை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எரிபொருள் இருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக இந்த முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
QR பயன்பாடு
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தேவையற்ற முறையில் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவே எமக்கு QR முறையின் தேவை ஏற்பட்டது.

அதேபோல், எரிபொருள் சிக்கல் காரணமாக தேவையற்ற கொள்வனவுகளைக் கட்டுப்படுத்தவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற வரிசைகள் உருவாவதைத் தடுக்கவும் எமக்கு QR தேவைப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது எரிபொருள் தொடர்பில் எமக்கு பெரிய பிரச்சினை இல்லாவிட்டாலும், எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், தேவையற்ற டொலர் தொகை நாட்டிற்கு வெளியே செல்வதைத் தவிர்ப்பதற்காக எரிபொருள் நுகர்வில் எல்லையை நாம் வகுக்க வேண்டும்.
எனவே, தற்போது QR முறையை இல்லாது செய்ய எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
You May Like this..
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan