இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட பயங்கர வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு 38 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள நிக்கல் தொழிற்சாலையிலேயே இன்று (24.12.2023) அதிகாலை குறித்த வெடிவிபத்து ஏற்ப்பட்டுள்ளது.
வெடி விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தனியார் தொழிற்சாலை வளாகம் ஒன்றில் நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை ஒன்றும் செயல்பட்டு வந்ததுள்ளது.
இந் நிக்கல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் சிலர் புகைப்போக்கிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த புகை போக்கிகளிலும் வெடி விபத்து நிகழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
எனினும் தீயில் சிக்குண்டு 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு 38க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்த 13 பேரில் 7 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். 6 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையாக தெரிய வராத நிலையில், தூய்மை பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தால் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
