உடல் நலக்குறைவிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்
உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாவீரர் நாளை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் அவர் இந்த அஞ்சலி நிகழ்வுகளை வழமை போன்று மேற்கொண்டுள்ளார்.
நவம்பர் 27 இல் தேசிய நினைவெழுச்சி நாள் தமிழர்களால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
முதல் மாவீரர்
அந்தவகையில், கம்பர் மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனின் பூர்வீக இல்லத்துக்கு முன்பாக நேற்று (27) பகல் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

சங்கரின் தாயார் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணம் (Jaffna) - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரர்களாக உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபன்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்பாய் ( Kopay) துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்
அதேபோன்று யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதிக்கு முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கொடிகாமம் (Kodikamam) மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது இராணுவத்தின் 522 வது பிரிகேட் தலைமையகமாக இயங்கி வருகின்றது. இந்த நிலையில் முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாகவும் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இறுதியாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாகவும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. இத்துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மாவீரர் தினத்தன்று அனைத்து இடங்களிலும் சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam