நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வரையறுக்கும் உத்தேச சட்டம் சமர்ப்பிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வரையறுக்கும் வகையிலான உத்தேச சட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் சட்டப் பிரேரணையாக இந்த வரைவுச் சட்ட மூலம் ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வரைவுச் சட்ட மூலம்
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கொள்கைகளுக்கு அமைவாக இந்த உத்தேச சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிறப்புரிமைகளை ரத்து செய்யக்கூடிய வகையில் புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விவாதம்
பத்தாம் நாடாளுமன்றின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் பிரேரணையாக இந்த உத்தேச சட்ட மூலம் குறித்து விவாதம் நடத்தப்படலாம் என ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்ட மூலம் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தி கூறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்தக் கட்சியின் கொள்கை எவ்வாறானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri