மரியுபோலில் மிகப்பெரிய போர்க்குற்றம் இடம்பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு
உக்ரைன் - மரியுபோலில் மிகப்பெரிய போர்க் குற்றம் நடைபெறுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படையினர் மூர்க்கத்தனமாகக் குண்டுவீசி எல்லாவற்றையும் அழித்து, கொலை செய்தும் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீது இன்னும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடினர். அங்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் 40 சதவீத எரிவாயுவை நம்பியுள்ளமையால் ரஷ்ய எண்ணெய்யைக் குறிவைப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கடினமான தேர்வாகும்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட 877 பேர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதனால் புதிதாக வேறு பொருளாதாரத் தடைகளை விதிப்பதால் ரஷ்யாவின் எரிவாயு கிடைக்காமல் போகும் நிலை காணப்படுகின்றமையால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயங்கிவருகிறது.
இருப்பினும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri