சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்
கொழும்புக்கும் - மாலைத்தீவின் மாலேயிக்கும் இடையிலான சேவையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவின் சுற்றுலாத்துறையை மீண்டும் மேம்படுத்தும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
துபாய்க்கும் மாலேயிக்கும் இடையிலான சேவையே கொழும்புக்கும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி துபாயில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும் விமானம், மாலேயின் ஊடாக மீண்டும் துபாய்க்கு திரும்பவுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் முதல் எமிரேட்ஸ் விமானம் மாலேய்க்கும் துபாய்க்கும் இடையிலான சேவையை நாள் ஒன்றுக்கு நான்காக அதிகரிக்கவுள்ளது.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் தற்போது உலகளாவிய ரீதியில் 120 பயணிகள் சேவைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 52 நிமிடங்கள் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
