இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம்

Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Food Crisis Financial crisis Sri Lanka Fuel Crisis
By Mayuri Jun 28, 2022 05:27 AM GMT
Report

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுகம், சுகாதாரம், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் இந்த காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் | Economic Crisis In Srilanka

அனைத்து துறையினருக்குமான அறிவிப்பு

அத்துடன் ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதன் மூலம் இந்த எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும்.

இந்த நிலையிலேயே எதிர்வரும் 10ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்காக ஏனைய துறையினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் முறையாக எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகிப்பதற்கான முறையான திட்டமொன்றை வகுத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற வகையில் இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள்

கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள பாடசாலைகளும் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை மூடப்படும்.

இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் | Economic Crisis In Srilanka

ஏனைய, பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகள்

போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய கட்டுப்பாடுகளால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் | Economic Crisis In Srilanka

இதேவேளை தமது சங்கத்தின் பேருந்து சேவைகள் இன்றைய தினம் இயங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார். 

புகையிரதங்கள்

இன்றைய தினம் வழமையான கால அட்டவணையின் கீழ் புகையிரதங்கள் இயக்கப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் | Economic Crisis In Srilanka

போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் அநேகமாக இடைநிறுத்தப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேபோல், எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை குறுந்தூர பொதுப் போக்குவரத்தை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் ஊடாக வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்காக பொறிமுறையானது ஜுலை மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் | Economic Crisis In Srilanka

மின் கட்டண அதிகரிப்பு

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று முதல் 3 வாரங்களுக்கு பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்களை அதிகரிப்பதற்கான பிரேரணையை இன்று முதல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகள்

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் | Economic Crisis In Srilanka

எனவே, மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் டொக்டர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை. இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 

அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதும், அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்சினைகள் உள்ளன.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US