நாளை பேருந்து சேவைகள் இயங்காது: கெமுனு விஜேரத்ன
தமது சங்கத்தின் பேருந்து சேவைகள் நாளை (28) இயங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேருந்து சேவைகளுக்கு தடை
இதேவேளை, நிலவும் எரிபொருள் நிலைமை காரணமாக நாளைய தினம் பேருந்து சேவைகள் தடைப்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது
மேலும் நாளை 28 முதல் 13 நாட்களுக்கு தனியார் வாகனங்களுக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலம் எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம் |
முடங்கும் கல்வி நடவடிக்கை: வெளியான விசேட அறிவிப்பு |