ஈஸ்டர் தாக்குதலில் "பிள்ளையான்" கருவி மாத்திரமே- கோட்டாபய ஏன் விசாரிக்கப்படவில்லை! சிறீதரன்
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஒரு கருவி மட்டுமே! முக்கிய காரணமாக இருந்த கோட்டபய ராஜபக்ச ஏன் விசாரிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஈஸ்டர் தாக்குதலை மையமாக வைத்து பிள்ளையான் விசாரிக்கப்படுகின்றார். அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும், நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த அதே மாதம் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, இஸ்லாம் மதம் இந்த நாட்டை என்ன செய்ய போகின்றது.இதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்று.. ஆங்கில பத்திரிக்கையொன்றுக்கு கூறியிருந்தார்.
ஆனால் அவர் இன்றுவரை விசாரிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam