சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! பெரும் சர்ச்சையாகும் சம்பவம் (Video)

Pillayan Shanakiyan Rasamanickam Channel 4 Easter Attack
By Dharu Sep 23, 2023 09:01 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை நோக்கி கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இரா சாணக்கியன், திரிப்பொலி பிளட்டூன் இராணுவப்படைபிரிவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் பிள்ளையான் ஒரு கொலையாளி எனவும் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

கடுமையான வார்த்தை பிரயோகம்

இதன்போது குறுக்கிட்ட பிள்ளையான் சாணக்கியனை நோக்கி, ''பைத்தியக்காரன்'' என்றும் ''பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான்'' எனவும் ''போடா'' என்றும் கடுமையான வார்த்தைகளை கொண்டு உருவக்கேலி செய்தும் விமர்சித்துள்ளார்.


குறிப்பாக சர்வதேச தரப்பிலும், இலங்கையின் சட்டமூலங்களிலும் ஒரு தனி நபரை விமர்சிப்பது பொதுத்தன்மையின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது.

எனினும் நேற்றைய தினம் சாணக்கியன் தொடர்பில் பிள்ளையான் தெரிவித்த விடயங்களானது பொதுமக்கள் தரப்பில் விமர்சனத்தத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஐ.நாவின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய - பிள்ளையான் மாற்றுத் திட்டம் (Video)

ஐ.நாவின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய - பிள்ளையான் மாற்றுத் திட்டம் (Video)

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு

எனினும் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் தெரிவித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களோ, அல்லது எதிர் தரப்பு உறுப்பினர்களோ நிலையியற் கட்டளை சட்டத்தின் அடிப்படையில் நீக்குவதற்கான வலியுறுத்தலை முன்வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நிலையியற் கட்டளை விடயத்தை முன்வைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடானது  அனைவரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! பெரும் சர்ச்சையாகும் சம்பவம் (Video) | Easter Attack Debate Pillaiyan Chanakyan Viral

எனினும்  பிள்ளையான் தெரிவித்த விடயமானது தற்போது வரை நாடாளுமன்றின் ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்கப்படாமல் ஆவணப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

குறிப்பாக வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் உள்ளடக்கியவர்களாக காணப்படுகின்றனர்.

கோட்டாபய மற்றும் மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

கோட்டாபய மற்றும் மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

இவ்வாறானதொரு நிலையில் பிள்ளையானினுடைய இந்த கருத்தானது  கிழக்கு மாகாணங்களை சார்ந்த புத்திஜீவிகளையும், கல்வியியலாளர்களையும் வாக்களித்த மக்களையும் பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களின் பண்பாடுகளின் அடிப்படையில் தனி ஒருவரை ஒரு போதும் உருவக்கேலி செய்யாத சூழ்நிலையில், பிள்ளையானின் இந்த செயற்பாடானது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மற்றும் புத்திஜீவிகளையும் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது, மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரின் இச் செயற்பாடானது மட்டக்களப்பு மண்ணிற்கு பெரும் இழுக்கு என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் நாடாளுமனற உறுப்பினர் பிள்ளையான் ஊடகவியலாளர்களை விமர்சித்தமையும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி ''போடா'' என்ற வார்த்தையை உபயோகித்தமையும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

சூத்திரதாரி அபூ ஹிந் யார்..! கேள்வியெழுப்பும் சஜித்: செய்திகளின் தொகுப்பு

சூத்திரதாரி அபூ ஹிந் யார்..! கேள்வியெழுப்பும் சஜித்: செய்திகளின் தொகுப்பு

குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்

குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US