சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: நோயாளர்கள் சிரமம்
பொலன்னறுவையில் அமைந்துள்ள ரஜரட்டை சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஜரட்டை சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் ஏராளமான நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நிலையில், நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இங்கு செயற்படும் இரத்த மாதிரிகளை தரம் பிரிக்கும் கட்டமைப்பில் முன்னர் ஒரே தடவையில் 100 பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடிந்த போதிலும், தற்போது 50 பேரின் இரத்த மாதிரிகள் மட்டுமே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
அரச வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படும் நோயாளிகள்
இங்கு வரும் வெளிநோயாளிகளுக்கு போதுமான பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைக்கு திருப்பி அனுப்பப்படும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.
அதேபோன்று உள்ளக நோயாளிகள் மாத்திரமன்றி வெளிநோயாளிகளுக்கும் போதுமான மருந்துகள் கிடைக்கப் பெறாத நிலையில் பெருந்தொகைப் பணம் செலவழித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
