போதைப்பொருள் வேட்டை : ஒரே நாளில் 725 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 725 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக் காவல் உத்தரவு பெற்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை
இதேவேளை, 738 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 3 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 713 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 99 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 246 கிராம் கஞ்சா, 56 ஆயிரத்து 27 கஞ்சா செடிகள், 369 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 62 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 2 ஆயிரத்து 552 போதை மாத்திரைகள், 141 கிராம் 670 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 600 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam