விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள்: தினேஷ் குணவர்த்தன
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப் போரின் போது உயிரிழந்துவிட்டார், எனவே அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் அகிம்சை வழியிலும், ஆயுத வன்முறை வழியிலும் போரிட்ட தலைவர்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு.
அதனால் அவர்கள் உயிரிழந்த பின்னரும் தங்கள் மனங்களில் உயிர் வாழ்கின்றார்கள் என்று சிலர் கருதுகின்றார்கள். ஆனால், பிரபாகரன் விடயத்தில் அது சற்று வேறுபாடாக இருக்கின்றது.
பிழைப்பு நடத்தும் அரசியல் தமிழ்த் தலைவர்கள்
இலங்கையில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்து, இலங்கையில் போரிட்டு மரணித்த அவரை வைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தமிழ்த் தலைவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.
பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
