மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு: நாடு திரும்பும் வைத்தியர்கள்
மருத்துவர்களின் பற்றாக்குறையானது, நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால் தீர்வுக்கு வரும் என சுகாதார துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள வைத்தியர் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுகாதாரப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
இதன் பின்னர், தற்போது விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள் இலங்கைக்கு திரும்பி வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அத்துடன் பல வைத்தியர்கள் தமது விடுமுறைகளை இரத்து செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
அது மாத்திரமன்றி, நாட்டை விட்டு வெளியேறும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
வைத்தியர் பற்றாக்குறை
இலங்கைக்கு திரும்பியுள்ள வைத்தியர்கள் மூலம், சுகாதார அமைச்சினால் தேவையான வைத்தியசாலைகளுக்கு விசேட வைத்தியர்களை நியமிக்க முடிந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும்" எனவும் அவர் நம்பிக்கை தெரிவிதுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 14 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
