திருகோணமலை மாவட்டத்தில் டெங்குநோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்
டெங்குநோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டமானது, நேற்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
உடனடி நடவடிக்கைகள்
டெங்கு சம்பந்தமாக தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் குறித்தும், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் (NDCU) சில நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டன.
எனவே, இந்தச் செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
