ஈரானில் பதற்றம்! மீண்டும் வெடித்தது மாணவர் போராட்டம்
ஈரானில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது நிகழ்த்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறைக்குப் பிறகு, தற்போது மீண்டும் அந்நாட்டு மாணவர்கள் மிகப்பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் திரண்ட மாணவர்கள், "சர்வாதிகாரி ஒழியட்டும்" போன்ற முழக்கங்களை எழுப்பி பேரணிகளை நடத்தினர்.
இந்தப் போராட்டங்களின் போது அரசு ஆதரவாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன.
ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள்
இராணுவத் தாக்குதல்
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வன்முறையில் சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கும் நிலையில், அந்தப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தங்களின் உரிமைகளை வலியுறுத்தியும் மாணவர்கள் இந்தத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மறுபுறம், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்.
அடுத்த பத்து நாட்களுக்குள் சுமூகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளதால், ஈரான் தற்போது ஒரு போருக்கான சூழலை எதிர்கொண்டுள்ளது.
போராட்டங்கள்
வெளிநாடுகளிலிருந்து இயங்கும் சில எதிர்க்கட்சிகள் இந்தத் தாக்குதலை ஆதரித்தாலும், ஈரானுக்குள் இருக்கும் மற்றொரு தரப்பினர் வெளிநாட்டுத் தலையீட்டை கடுமையாக எதிர்க்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியால் தொடங்கி தற்போது ஆட்சி மாற்றத்தை நோக்கிய ஒரு பெரிய புரட்சியாக இந்தப் போராட்டங்கள் உருவெடுத்துள்ளதால், ஈரான் அரசு பெரும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam