சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேசபந்து
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon), இன்று(19) மாலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு வெலிகம, பெலேன பிரதேசத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை
நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அவர், இன்றைய தினம் சட்டத்தரணிகள் ஊடாக மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், நாளைய தினம்(20) வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து இன்று மாலை தேசபந்து தென்னகோன், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்குள்ள சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
