தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்ற மகன் கைது
தனது தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்று வந்த நபரொருவரை பாணந்துறைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நில அளவையாளர் திணைக்களத்தில் பணியாற்றிய நபரொருவர், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் மரணித்துள்ளார்.
மகன் கைது
அவருக்கு உரித்தான ஓய்வூதியம், அவரது மரணத்தின் பின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரணித்தவரின் மகன், தன் தாயுடன் சேர்ந்து (மரணித்தவரின் மனைவி) இணைந்த வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து தந்தையின் ஓய்வூதியத்தை அந்த வங்கிக் கணக்கின் ஊடாகப்பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே மரணித்தவரின் மனைவியும் இறந்து தற்போதைக்கு ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டநிலையில், அவரது மகன் தொடர்ந்தும் தந்தையின் ஓய்வூதியப் பணத்தை முறைகேடாகப் பெற்று வந்துள்ளார்.
இதுதொடர்பில் பாணந்துறை பிரதேச செயலகத்தில் இருந்து கிடைத்த முறைப்பாட்டைஅடுத்து சந்தேக நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

மும்பை அலுவலகத்திற்கு ரூ.1000 கோடி வாடகை செலுத்தும் நிறுவனம்.., அம்பானிக்கு சொந்தமானதல்ல News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
