டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைப்பின் தொற்று நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் 24000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் திகதி வரையில் நாட்டில் 24277 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் இதில் 5183 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடுதியான அதிகரிப்பு
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 8711 எனப் பதிவாகியுள்ளது.
அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam
