கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கிளிநொச்சியில்(Kilinochchi) இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.(Jaffna) போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய தம்பிராசா ரவிசந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர்
குறித்த நபர், கனகபுரம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ,யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(23) உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |