மக்கள் பிரதிநிதிகளின் சம்பள விவகாரம்.. பிரேரணையை சமர்ப்பித்த தயாசிறி
பொது பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள் கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சமர்ப்பித்தார்.
கடுமையான சவால்..
இத்தகைய நடைமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஜனநாயகத்திற்கு கடுமையான சவாலை ஏற்படுத்துவதாகவும் குறித்த பிரேரணை குறிப்பிடுகிறது.

எந்தவொரு அரசியல் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை வசூலிப்பதையோ அல்லது கட்சி கணக்குகளுக்கு திருப்பி விடுவதையோ தடை செய்ய நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என ஜெயசேகர முன்மொழிந்துள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அதன் அமைச்சர்கள் தங்கள் மாதாந்த சம்பளத்தை ஒரு பொதுவான கட்சி நிதிக்கு பங்களிப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam