ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரான டேன் பியசாத் தலா 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மேலும் 5 சந்தேக நபர்களை சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மே 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் மீதான் தாக்குதல்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பெரும் கலவரங்கள் வெடித்தன. இந்த சம்பவங்களில் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
