மட்டக்களப்பில் நினைவேந்தல் செய்ய நீதிமன்றம் அனுமதி: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (Photos)
மட்டக்களப்பு - மாவடி முன்மாரி, தாண்டியடி மற்றும் தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27.11.2023) திங்கட்கிழமை வழங்கியுள்ளது.
தடை உத்தரவு
மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று (27.11.2023) நினைவேந்தல் செய்வதை தடைசெய்ய கோரி வாழைச்சேனை, வவுணதீவு, சந்திவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, பொலிஸார் இன்நாள் முன்னாள் நா.உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உட்பட ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தலா 20 பேருக்கு எதிராக மட்டக்களப்பு ,வாழைச்சேனை நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், கட்சி தேசிய அமைப்பாள் த.சுரேஸ், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் உட்படவர்கள் சட்டத்தரணி பிறேம்நாத், விஜயகுமார் உட்பட 7 சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றில் முன்நகர்வு பத்திரம் விண்ணப்பித்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்ய உரிமையுண்டு.
கோரிக்கை
குறித்த மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் சுயமாக நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியும் எனவும் அதற்கு அனுமதியளித்ததுடன் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடிகள், புகைப்படங்கள் பயன்படுத்தகூடாது எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
எனவே மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வருகை தந்து நினைவேந்தலில் அலை அலையாக திரண்டு ஈடுபடுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)




