இலங்கையில் மனிதர்கள் மத்தியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குரங்குகள்
நாட்டில் உள்ள 300,000 குரங்குகளில் சுமார் 50,000 குரங்குகள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பதன் மூலம் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
300,000 குரங்குகளில் 250,000 குரங்குகள் காடுகளில் வசிக்கின்றன.
இந்தநிலையில் வேட்டையாடுதல் மற்றும் குறைந்த உணவு கிடைப்பதால், குரங்குகள் மக்கள் பிரதேசங்களுக்கு வருவதாக மனிதநேய மேலாண்மைக்கான கால்நடை மருத்துவர் சமித் நாணயக்கார கூறியுள்ளார்.
குரங்குகளின் உயிர்வாழ்வு விகிதம்
இருப்பினும், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் குரங்குகள் வேட்டையாடுபவர்களை எதிர்கொள்வதில்லை மற்றும் ஏராளமான கழிவு உணவுகளை அவை உட்கொள்கின்றன.
இதன் விளைவாக, நகரங்கள் மற்றும் கிராமங்களில் குரங்குகளின் உயிர்வாழ்வு விகிதம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, மனித நடவடிக்கைகளே சில விலங்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தநிலையில், இந்த சனத்தொகைகளை விஞ்ஞான ரீதியாக நிர்வகிப்பதற்கு பிரத்தியேக நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விலங்குகளின் வாழ்விடங்கள்
இதனை விடுத்து, மற்ற நாடுகளுக்கு விலங்குகளை ஏற்றுமதி செய்வதோ அல்லது அவற்றைக் கொலை செய்ய அனுமதிப்பதோ இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
பல அரசு நிறுவனங்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைத்துள்ளன, ஆனால் இந்த நடவடிக்கைகள் அறிவியல் அணுகுமுறைகளின் அடிப்படையில் அமையவில்லை. மக்கள் விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இதன் விளைவாக, அந்த வாழ்விடங்களில் வாழ்ந்த விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளன என்றும் மனிதநேய மேலாண்மைக்கான கால்நடை மருத்துவர் சமித் நாணயக்கார(Samith Nanayakkara) கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
